தீபாவளிப் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊரப்பாக்கம் பகுதியில் வெளியூர்களுக்கு செல்வதற்கான தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இந்தப் பண்டிகையை விபத்தில்லாமல், மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, சென்னை-பெங்களூரு, ஜிஎஸ்டி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள், கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் அனைத்து முக்கிய சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காஞ்சிபுரம் நகரில் தீபாவளிப் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், கடை வீதிகள், சுற்றுலாத் தலங்கள், பட்டாசுக் கடைகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், கண்காணிப்பு கேமரா, 8 உயர்கோபுரங்கள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் தங்களது பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்வதற்கு, மது அருந்தாமல், சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!

ஐஐஎம் திருச்சி-ல் 'நூலகத் தகவல் உதவியாளர்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அனைவருக்கும் தரமான சுகாதார சேவை: பிரதமர் மோடி

ஹரி இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


