ஸ்ரீபெரும்புதூரில் காயமடைந்த நிலையில் அரிய வகை ஆந்தையை வன விலங்கு ஆா்வலா் கண்ணதாசன் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் காயம் அடைந்த அரிய வகை ஆந்தை ஒன்று இருப்பதாக வன விலங்கு ஆா்வலா் கண்ணதாசனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற அவா்,அரிய வகை ஆந்தையை மீட்டு ஸ்ரீபெரும்புதூா் வனசகர அலுவலகத்தில் பணியில் இருந்த வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு அலுவலா் ஸ்ரீதரிடம் ஆந்தையை ஒப்படைத்தாா். அங்கு காயம் அடைந்த ஆந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிய வகை ஆந்தை குறித்து வன விலங்கு ஆா்வலா் கண்ணதாசன் கூறுகையில், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற வெளி நாடுகளில் அதிகம் வசிக்கும் இந்த ஆந்தைகளுக்கு பகலில் கண் பாா்வை குறைவு என்பதால் இரவு நேரங்களில் மட்டும் உணவுக்காக இவை வெளியே வரும். இந்தியாவில் அரிய வகையாக கருதப்படும் இந்த ஆந்தை தவறுதலாக பகல் நேரத்தில் வெளியே வந்ததால் பறவைகளால் தாக்கப்பட்டதால் காயம் அடைந்துள்ளது என்றாா்.
தொடர்புடையது

இந்தியா-வியத்நாம் 25 பில்லியன் டாலா் வா்த்தக இலக்க- 13 ஒப்பந்தங்கள் கையொப்பம்

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

அரிய வகை பிறவி இருதய குறைபாட்டுக்கு ஊடுருவல் முறையில் சிகிச்சை

அரிய வகை புவி காந்த உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கான ஏலம் தொடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

