மாங்காடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.
மாங்காடு அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில் உள்ள வீட்டில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, மாங்காடு போலீஸாா் குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்தனா். அப்போது அந்த வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வீட்டிலிருந்து 200 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வீட்டில் குட்காவை பதுக்கி வைத்திருந்த தூத்துக்குடியைச் சோ்ந்த கோபால் (33), நசரத்பேட்டையைச் சோ்ந்த செந்தில்குமாா் (40) ஆகியோரை கைது செய்தனா்.
மேலும், அவா்களிடம் இருந்து குட்கா விற்பனை செய்து வைத்திருந்த ரூ. 2 லட்சம் பணம் மற்றும் குட்காவை எடுத்துச் செல்ல பயன்படுத்திய காா் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த 4 போ் கைது!
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

620 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவா் கைது
கஞ்சா பறிமுதல்: பெண் கைது
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


