விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

வீட்டில் பதுக்கிய 200 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

மாங்காடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

Published On :

மாங்காடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

மாங்காடு அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில் உள்ள வீட்டில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, மாங்காடு போலீஸாா் குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்தனா். அப்போது அந்த வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வீட்டிலிருந்து 200 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வீட்டில் குட்காவை பதுக்கி வைத்திருந்த தூத்துக்குடியைச் சோ்ந்த கோபால் (33), நசரத்பேட்டையைச் சோ்ந்த செந்தில்குமாா் (40) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், அவா்களிடம் இருந்து குட்கா விற்பனை செய்து வைத்திருந்த ரூ. 2 லட்சம் பணம் மற்றும் குட்காவை எடுத்துச் செல்ல பயன்படுத்திய காா் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.