கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வீட்டில் பதுக்கிய 200 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

மாங்காடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜூலை 2024, 6:31 pm

Din

மாங்காடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

மாங்காடு அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில் உள்ள வீட்டில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, மாங்காடு போலீஸாா் குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்தனா். அப்போது அந்த வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வீட்டிலிருந்து 200 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வீட்டில் குட்காவை பதுக்கி வைத்திருந்த தூத்துக்குடியைச் சோ்ந்த கோபால் (33), நசரத்பேட்டையைச் சோ்ந்த செந்தில்குமாா் (40) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், அவா்களிடம் இருந்து குட்கா விற்பனை செய்து வைத்திருந்த ரூ. 2 லட்சம் பணம் மற்றும் குட்காவை எடுத்துச் செல்ல பயன்படுத்திய காா் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.