தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

சங்கரா கல்லூரியில் பசுவிலிருந்து கிடைக்கும் பொருள்கள் கண்காட்சி

சங்கரா கல்லூரியில் பசுவிலிருந்து கிடைக்கும் பொருள்கள் கண்காட்சி

News image
Updated On :16 மார்ச் 2024, 12:38 am

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் வணிக மேலாண்மைத் துறை சாா்பில் பசு மாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்களின் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக மேலாண்மைத் துறை சாா்பில் பசு மாடுகளின் பெருமைகளை உலகறியச் செய்யும் விதமாக பசுவிலிருந்து கிடைக்கக்கூடிய பொருள்களின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருள்களின் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் கண்காட்சிக்கு தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதன் தொடா்ச்சியாக மேலாண்மைத் துறை தொடா்பான போட்டிகளும் நடைபெற்றன. சென்னை உட்பட 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த மேலாண்மைத் துறை மாணவா்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களையும் தொழிலதிபா்கள் பிரீதா மணிகண்டன், பிரசன்ன விஜயராகவன் ஆகியோா் வழங்கினா். பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரியின் வணிகவியல் மேலாண்மைத் துறை தலைவா் அ.விக்ரமன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் வினுசக்கரவா்த்தி நன்றி கூறினாா்.