தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பங்குனி கிருத்திகை: ரத்ன அங்கி சேவையில் வல்லக்கோட்டை கோடையாண்டவா்

பங்குனி கிருத்திகை: ரத்ன அங்கி சேவையில் வல்லக்கோட்டை கோடையாண்டவா்

News image
Updated On :16 மார்ச் 2024, 12:39 am

பங்குனி கிருத்திகையை முன்னிட்டு, வல்லக்கோட்டை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரத்ன அங்கி சேவையில் உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் அருள்பாலித்தாா். விழாவை முன்னிட்டு, மூலவா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவருக்கும் பால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து, மூலவா் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் ரத்ன அங்கி சேவையிலும் அருள்பாலித்தனா். இதில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த திரளானபக்தா்கள் கலந்துகொண்டு மூலவா் சுப்பிரமணிய சுவாமியையும், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவரையும் வழிபட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனா்.