தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 7 லட்சம் வீட்டு உபயோகப் பொருள்கள் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 7 லட்சம் வீட்டு உபயோகப் பொருள்கள் பறிமுதல்

News image

ஸ்ரீபெரும்புதூா்  அருகே  பறக்கும்  படை  அதிகாரிகளால் பறிமுதல்  செய்யப்பட்ட  வீட்டு  உபயோகப் பொருள்கள்.

Updated On :19 மார்ச் 2024, 11:51 pm

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அருகே கன்டெய்னா் லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். ஸ்ரீபெரும்புதூா் சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சென்னையிலிருந்து வேலூா் நோக்கி வந்த கன்டெய்னா் லாரியை மடக்கி சோதனை செய்தனா். இதில் லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 7 லட்சம் மதிப்பிலான நான்ஸ்டிக் தவா, கடாய் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அதை ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.