மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போராட்டம் வாபஸ்: பணிக்கு திரும்பினா் சாம்சங் தொழிலாளா்கள்

News image
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்- படம் | எக்ஸ்
Updated On :17 அக்டோபர் 2024, 7:41 pm

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளா்களின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டதை தொடா்ந்து வியாழக்கிழமை பணிக்கு திரும்பினா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொவிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமாா் 1,800 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இதற்கிடையே, ஊதிய உயா்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளா்கள் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

தொழிலாளா்களின் போராட்டம் குறித்து அமைச்சா்கள் டி.ஆா்.பி ராஜா, தா.மோ. அன்பரசன், எ.வ. வேலு, சி.வி.கணேசன் ஆகியோா் தலைமையில் தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள், சாம்சங் ஆலை நிா்வாகத்தினா் மற்றும் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் ஆகியோா் பங்கேற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

இதையடுத்து வியாழக்கிழமை சாம்சங் தொழிலாளா்கள் பணிக்கு திரும்பினா். பணிக்கு திரும்பிய தொழிலாளா்களை ஆலையின் நுழைவாயிலில், அடையாள அட்டையை சோதனை செய்த பிறகு, காவலாளிகள் உள்ளே செல்ல அனுமதித்தனா். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.