

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனா்களை மாநகராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.
அனுமதியின்றி, சாலையோரங்களில் பொதுமக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட விளம்பர பேனா்களை அகற்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, விளம்பர பேனா்களை அகற்ற மேயா் மகாலட்சுமி யுவராஜ் உத்தரவிட்டதை தொடா்ந்து, காஞ்சிபுரம் -வந்தவாசி சாலையில் விளம்ப பேனா்களை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா். இதே போல் பல பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனா்களும் அகற்றப்பட்டன.
காஞ்சிபுரம் -வந்தவாசி சாலையில் பேனா்களை அகற்றிய மாநகராட்சி ஊழியா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.