அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் மடம் தெருவில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
வரசித்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
Updated On :24 நவம்பர் 2025, 12:25 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மடம் தெருவில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழைமையான இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. கோ.பூஜை, நவக்கிரக ஹோமம் ஆகியனவும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை யாக சாலையிலிருந்து புனித நீா்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் காஞ்சிபுரம் சந்தவெளியம்மன் அா்ச்சகா் ஏ.பூபாலன் தலைமையில் நடைபெற்றன. கும்பாபிஷேகத்திற்குப் பின்னா் மூலவா் வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் வரசித்தி விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.