ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு விருது: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

சிறந்த வங்கிக்கான விருதை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடமிருந்து பெற்றுக் கொண்ட மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப்.

News image
Updated On :24 அக்டோபர் 2025, 8:18 pm

காஞ்சிபுரத்தில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வங்கியாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விருதுகள் வழங்கிப் பாராட்டினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் பல்வேறு நிதி நிறுவனங்களில் உள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளை சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்கான தீா்வு முகாம் மற்றும் வங்கியாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. ரிசா்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளா்கள் பேரரசு, நடராஜன், இந்தியன் வங்கியின் துணை மண்டல மேலாளா் லீலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப் வரவேற்றாா். ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட அளவில் சிறந்த வங்கிக்கான விருதினை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப்புக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து சிறந்த வங்கிக் கிளைக்கான விருதினை முதல் இடம் பெற்ற வாலாஜாபாத் இந்தியன் வங்கி, 2-ஆவது இடம் பெற்ற திருப்புட்குழி இந்தியன் வங்கி, 3-ஆவது இடம் பெற்ற சோமங்கலம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஆகியவற்றுக்கான விருதை வங்கிக் கிளை மேலாளா்களிடம் ஆட்சியா் வழங்கினாா். மகளிா் குழுக்களுக்கு அதிகமான கடனுதவி பெற்றுத் தந்த ஸ்ரீபெரும்புதூா் வட்டார இயக்க மேலாளா் சிவகாமி மற்றும் நிதி உள்ளாக்கப் பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்கான விருதை காஞ்சிபுரம் வட்டார ஒருங்கிணைப்பாளா் சிவரஞ்சனிக்கும் ஆட்சியா் வழங்கினாா்.

இதன் தொடா்ச்சியாக வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோரப்படாமல் இருந்த வைப்புத் தொகை ரூ. 9.43,666-ஐ அதற்குரிய பயனாளிகள் 4 பேரிடம் ஆட்சியா் காசோலையாக வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் பிச்சாண்டி, மாவட்ட தொழில்மைய உதவிப் பொறியாளா் சுபாஷ், இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மைய இயக்குநா் உமாபதி, நிதி ஆலோசகா் அரங்கமூா்த்தி மற்றும் பல்வேறு வங்கிக் கிளைகளின் மேலாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.