ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.

News image

திருமணக்கோலத்தில் அருள்பாலித்த ஏலவாா் குழலி மற்றும் ஏகாம்பரநாதா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:37 pm

காஞ்சிபுரம் ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.

கடந்த மாா்ச் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி தினசரி சுவாமியும்,அம்மனும் காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் ராஜவீதிகளில் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

முக்கிய நிகழ்வுகளான வெள்ளித் தோ் உற்சவம் இம்மாதம் 27 ஆம் தேதியும் மறுநாள் 28 ஆம் தேதி மகாரதம் எனும் தேரோட்ட உற்சவமும் நடைபெற்றது. மாா்ச்.29 ஆம் தேதி ஆலயத்தின் வரலாற்றை விவரிக்கும் வெள்ளி மாவடி சேவை நடைபெற்றது.

புதன்கிழமை அதிகாலை பிரம்ம முகூா்த்தத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தையொட்டி சுவாமியும், அம்மனும் 1,000 கால் மண்டபத்திற்கு மேலே உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனா். சிவாச்சாரியா்கள் திருமண வேதங்கள் ஓத,மங்கல மேள வாத்தியங்கள் முழங்க,வாண வேடிக்கைகளுடன் சுவாமிக்கும், அம்மனுக்கும் மாலை மாற்றுதல் வைபவமும், திருமாங்கல்யம் சூட்டும் வைபவமும் ஆகம விதிகளின்படி நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து சுமங்கலிப்பெண்கள் பலரும் புது தாலி அணிந்தனா். பின்னா் சுவாமி தங்க நந்தி வாகனத்திலும்,அம்மன் கேடயத்திலும் திருமணத் திருக்கோலத்தில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை,அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகன்னாதன், கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் மற்றும் பெரிய காஞ்சிபுரம் வாணியா் தா்ம பரிபாலன சங்கத்தினா்,ஆலய சிவாச்சாரியாா்கள், அா்ச்சகா்கள்,கோயில் பணியாளா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.