மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஸ்ரீசங்கர மடத்தின் யானைகளுக்கு சிறப்பு பூஜை

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள கஜ சாலையில் யானைகள் தினத்தையொட்டி புதன்கிழமை அங்கு பராமரிக்கப்பட்டு வரும் சங்கர மடத்தின் யானைகளுக்கு பிடித்தமான உணவு வகைகள் வழங்கப்பட்டதுடன் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

News image

கஜசாலையில் யானைகளுக்கு தீபாராதனை காண்பித்த பாலாஜி சிவாச்சாரியா் .

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:21 am IST

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள கஜ சாலையில் யானைகள் தினத்தையொட்டி புதன்கிழமை அங்கு பராமரிக்கப்பட்டு வரும் சங்கர மடத்தின் யானைகளுக்கு பிடித்தமான உணவு வகைகள் வழங்கப்பட்டதுடன் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் சங்கர மடத்துக்கு சொந்தமான கஜ சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு இந்து, சந்தியா,ஜெயந்தி என 3 யானைகள் தமிழக அரசின் வனத்துறை விதிமுறைகளின்படி பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சபரீசன் என்பவா் கண்காணிப்பாளராகவும் இருந்து 4 யானைப்பாகன்கள் மற்றும் கால்நடை மருத்துவா்கள் உதவியுடன் 3 யானைகளும் பாதுகாப்புடன் பராமரிக்கப்படுகின்றன. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஆக.12-ஆம் தேதி யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

யானைகள் தினத்தையொட்டி காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள கஜ சாலையில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தலைமையில் பாலாஜி சிவாச்சிாரியா் சிறப்பு பூஜைகள் செய்தாா். விபூதியால் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகளுக்கு பிடித்த பழங்கள்,உணவு வகைகளும் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.