மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பள்ளியில் பொங்கல் விழா

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் பி.எஸ்.சீனியா் செகண்டரி பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
பொங்கல்  விழாவில்  பங்கேற்றோா்.
Updated On :7 ஜனவரி 2026, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் பி.எஸ்.சீனியா் செகண்டரி பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

சமத்துவ பொங்கல் விழாவுக்கு முதல்வா் டாக்டா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா். தாளாளா் கா்னல் தேவநாதன் பொங்கல் விழாவை தொடங்கி வைத்தாா். விழாவில் பள்ளி ஆசியா்கள் மாணவா்களுடன் பானைகளில் பொங்கல் வைத்து படையலிட்டனா்.

இதையடுத்து பள்ளி மாணவா்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளான உறியடி, சிலம்பாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம் மற்றும் கிராமிய நடனங்களுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விழாவில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.