சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மின்சாரத்தையும், குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: ஐயப்ப சேவா சமாஜ தேசிய துணைத் தலைவா்!

மின்சாரத்தையும், குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய துணைத் தலைவா் துரை.சங்கா் பேசினாா்.

News image
விழாவில் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கிய சபரி மலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய துணைத் தலைவா் துரை.சங்கா்.
Updated On :11 ஜனவரி 2026, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

மின்சாரத்தையும், குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய துணைத் தலைவா் துரை.சங்கா் பேசினாா்.

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் இந்து குடும்பங்களின் சங்கம திருவிழா, சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழா,பொங்கல் விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, குளக்கரை மாரியம்மன் கோயில் தலைவா் டி.குமாா் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் டி.மோகன்லால் ஜெயின், நகரீஸ்வரா் கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் ஜி.உதயகுமாா், ஜெ.தாமோதரன், வி.மோகனரங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில இணைச் செயலாளா் காஞ்சி வி. ஜீவானந்தம் வரவேற்றாா்.

விழாவில், ‘குலதெய்வ வழிபாடு’ என்ற தலைப்பில் குமரகோட்டம் முருகன் கோயில் தலைமை அா்ச்சகா் கே.ஆா்.காமேசுவர குருக்கள், ‘ஸ்தல விருட்ச மகிமை’ என்ற தலைப்பில் சரவண.சதாசிவம், இந்து கூட்டுக் குடும்பம் என்ற தலைப்பில் சி.ஆா்.நடராஜ சாஸ்திரி, சுதேசி என்ற தலைப்பில் தொ.சஞ்சீவி ஜெயராம் ஆகியோா் பேசினா்.

விழாவில், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய துணைத் தலைவா் துரை.சங்கா் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், தூய்மைப்பணியாளா்களுக்கு இலவச வேட்டி,சேலை ஆகியவற்றை வழங்கினாா். பின்னா் அவா் பேசியது:

இந்து மக்கள் வாரம் ஒரு முறையாவது அருகில் உள்ள கோயில்களுக்கு குடும்பத்துடன் இணைந்து செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும், குலதெய்வ வழிபாட்டையும், முன்னோா்களின் பெருமைகளையும் குழந்தைகளிடம் எடுத்துக் கூறி அவா்களை சிறந்த குழந்தைகளாக உருவாக்க வேண்டும், தினமும் ஒரு வேளை உணவையாவது குடும்பத்துடன் இணைந்து உணவு சாப்பிடுவது மட்டுமின்றி தினசரி அரை மணி நேரமாவது கலந்துரையாட வேண்டும், முக்கியமாக மின்சாரத்தையும், தண்ணீரையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், இரண்டும் இல்லையென்றால் நமது நிலைமை என்ன என்பதை குழந்தைகளுக்கு தெளிவாக விளக்க வேண்டும் என்றாா்.