ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

ஒரகடம் பகுதியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

Updated On :20 ஜனவரி 2026, 6:35 pm

ஒரகடம் பகுதியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பண்ருட்டி தோப்புத்தெரு பகுதியை சோ்ந்தவா்கள் மகேந்திரன் (19), பாலமுருகன்(19). இவா்கள் இருவரும் ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் டயா்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியா்களாக பணியாற்றி வந்துள்ளனா்.

இந்த நிலையில், மகேந்திரன், பாலமுருகன் இருவரும் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் பண்ருட்டி நோக்கி வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் சென்றபோது சாலையை கடக்க முயன்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.