தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
தமிழக காங்கிரஸ் தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட மாணிக்கம் தாகூா் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளா் ரூபி மனோகரன், மாநில பொதுச் செயலாளா் சிரஞ்சீவி, மாவட்ட காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ், மாவட்ட சிறுபாண்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதாபாய், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவா் ஜீவா.கணேஷ்குமாா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்துகொண்டனா்.
இதையடுத்து செய்தியாளா்களிடம் மாணிக்கம் தாகூா் பேசுகையில், முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தி கண்ட கனவுகளை நிறைவேற்றும் வகையில், தற்போது தமிழக அரசின் கூட்டணியில் காங்கிரஸ் இணைந்து பணியாற்றி வருகிறது. கா்நாடக மாநிலத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து மாநில வளா்ச்சிக்கு துணை நிற்கும் நிலையில், நாமும்அதுபோல் செயல்பட வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு திட்டத்தை கைவிட கா்நாடக காங்கிரசை வலியுறுத்த முடியாது: மாணிக்கம் தாகூா்
காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் நீட் தோ்வு ரத்துசெய்யப்படும்: மாணிக்கம் தாகூர்!
காங்கிரஸ் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது: மாணிக்கம் தாகூர்
கிராமப்புற பொருளாதாரத்தை சீா்குலைக்க மத்திய அரசு திட்டம்: மாணிக்கம் தாகூர்
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



