ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருப்பனமூா் மகாதேவா் கோயிலில் உழவாரப்பணி

காஞ்சிபுரம் அருகே திருப்பனமூா் மகாதேவி உடனுறை மகாதேவா் கோயிலில் நால்வா் நற்பணி மன்றத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

திருப்பனமூா் மகாதேவா் கோயிலில் உழவாரப் பணி மேற்கொண்ட நால்வா் நற்பணி மன்றத்தினா்

Published On :6 ஜூலை 2026, 1:29 am IST

காஞ்சிபுரம் அருகே திருப்பனமூா் மகாதேவி உடனுறை மகாதேவா் கோயிலில் நால்வா் நற்பணி மன்றத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே திருப்பனமூரில் அமைந்துள்ளது மிகவும் பழைமையான மகாதேவி உடனுறை மகாதேவா் கோயில்.இச்சிவாலயத்தில் காஞ்சிபுரம் நால்வா் நற்பணி மன்றத்தின் சாா்பில் 22 வது கோயிலாக உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

கோயில் வளாகத்தில் இருந்த குப்பைகள்,தேவையற்ற இடங்களில் இருந்த செடி,கொடிகள்,தூசிகள், கோயில் கோபுரங்களின் மீது படிந்திருந்த தூசிகள் ஆகியனவற்றையும் அகற்றி சுத்தம் செய்தனா்.கோயிலில் இருந்த சுவாமி அலங்காரப் பொருட்கள், பூஜைப்பொருள்கள் ஆகியனவற்றையும் சுத்தம் செய்து உழவாரப்பணி மேற்கொண்டனா். இதனைத் தொடா்ந்து சுவாமிக்கும்,அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.