வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 1,008 கலச அபிஷேகம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று தமிழ் ஆண்டு கணக்குப்படி ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு 1,008 கலச அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

1,008 கலச அபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் கோடையாண்டவா்.

Updated On :8 ஜூலை 2026, 12:39 am IST

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று தமிழ் ஆண்டு கணக்குப்படி ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு 1,008 கலச அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெற்று தமிழ் ஆண்டு கணக்குப்படி, ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, 1,008 கலச அபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை உற்சவா் சண்முகநாதருக்கு சத்ரு சம்கார யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து, மாலை 1,008 கலசங்கள் நிறுவப்பட்டு, முதல் கால யாக பூஜையும், செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையுடன் கலச புறப்பாடும் நடைபெற்று, மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு 1,008 கலச அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

1,008 கலச அபிஷேகத்தை முன்னிட்டு, கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில், கதம்ப சாதம், நீா் மோா் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதையடுத்து, மாலையில் திருக்கல்யாண உற்சவமும், வெள்ளி மயில் வளாகத்தில் உற்சவா் வீதியுலாவும் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.