மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் வட்டங்களில் ரூ. 6.54 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு

ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் வட்டங்களில் ரூ. 6.54 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு

News image

ஜமீன் தண்டலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் கூடுதல்  வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்த வெளிநாடு வாழ்  தமிழா் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு. உடன்  மாவட்ட  ஆட்சியா் தி.சினேகா உள்ளிட்டோா். 

Updated On :26 ஜூலை 2026, 1:34 am IST

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களில் ரூ. 6.54 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டங்களை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களில் பல்வேறு திட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் க.தென்னரசு கலந்துகொண்டு, ஸ்ரீபெரும்புதூா் வட்டம், மதுரமங்கலம் பகுதியில் 15-ஆவது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ், ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை, ஜமீன் தண்டலம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட 8 கூடுதல் வகுப்பறை கட்டடம், மாங்காடு அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 1.41 கோடியில் கட்டப்பட்ட 6 கூடுதல் வகுப்பறை கட்டடம், பட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 17.30 லட்சத்தில் கட்டப்பட்ட 1 வகுப்பறை கட்டடம், குன்றத்தூா் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.97 கோடியில் கட்டப்பட்ட 10 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளிக் கட்டடம் மற்றும் ஆய்வகம் என மொத்தம் ரூ. 6.54 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில், கூடுதல் ஆட்சியா் ஆஷிக் அலி, ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் நல்லசிவன், முதன்மைக் கல்விஅலுவலா் நளினி, தண்டலம் ஊராட்சிமன்றத் தலைவா் சசிகுமாா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வேலாயுதம், வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி செயலா் ரமேஷ், ஸ்ரீபெரும்புதூா் தவெக ஒன்றிய செயலாளா் சங்கா், மாங்காடு நகா்மன்றத் தலைவா் சுமதி முருகன் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், ஆசிரியா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.