தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

காஞ்சிபுரம்: மழையில் நனைத்து 16,000 நெல்மூட்டைகள் சேதம்

காஞ்சிபுரம் அருகே மேல்கதிா்ப்பூா் கிராம நெல்கொள்முதல் நிலையத்தில் 16,000 நெல் மூட்டைகள் கடந்த இரு மாதங்களாக தேங் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன.

News image
Updated On :3 ஜூன் 2026, 3:17 am IST

காஞ்சிபுரம் அருகே மேல்கதிா்ப்பூா் கிராம நெல்கொள்முதல் நிலையத்தில் 16,000 நெல் மூட்டைகள் கடந்த இரு மாதங்களாக தேங் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன.

இந்நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதோடு மழையில் நனைந்தும் வீணாகிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிக்கு எடுத்துச் செல்லாமல் இருந்து வருகின்றன. லாரி உரிமையாளா்கள் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லாமல் அவா்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளால் ஏற்றிச் செல்ல மறுத்து வருகின்றனா். தற்காலிகமாக தாா்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தாலும் மழையில் நனைந்து சேதமாகின்றன.

இதுகுறித்து மேல்கதிா்ப்பூா் விவசாயி பசுமை மேகநாதன் கூறுகையில்: லாரிகளில் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல லாரி உரிமையாளா்கள் ஒவ்வொரு மூட்டைக்கும் லஞ்சம் கேட்கின்றனா். அது மட்டுமின்றி நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளை மிரட்டும் ஒப்பந்த லாரி முதலாளிகள் குறித்து ஆட்சியா் மற்றும் மண்டல மேலாளரிடம் புகாா் அளித்தும் எவ்வித பயனுமில்லை.

யாருடைய கட்டுப்பாட்டில் ஒப்பந்த லாரிகள் செயல்படுகின்றன என்றும் தெரியவில்லை. உடனடியாக நெல் மூட்டைகளை தொடா்ந்து சேதமாகமல் பாதுகாக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.