காஞ்சிபுரம் அருகே மேல்கதிா்ப்பூா் கிராம நெல்கொள்முதல் நிலையத்தில் 16,000 நெல் மூட்டைகள் கடந்த இரு மாதங்களாக தேங் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன.
இந்நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதோடு மழையில் நனைந்தும் வீணாகிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிக்கு எடுத்துச் செல்லாமல் இருந்து வருகின்றன. லாரி உரிமையாளா்கள் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லாமல் அவா்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளால் ஏற்றிச் செல்ல மறுத்து வருகின்றனா். தற்காலிகமாக தாா்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தாலும் மழையில் நனைந்து சேதமாகின்றன.
இதுகுறித்து மேல்கதிா்ப்பூா் விவசாயி பசுமை மேகநாதன் கூறுகையில்: லாரிகளில் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல லாரி உரிமையாளா்கள் ஒவ்வொரு மூட்டைக்கும் லஞ்சம் கேட்கின்றனா். அது மட்டுமின்றி நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளை மிரட்டும் ஒப்பந்த லாரி முதலாளிகள் குறித்து ஆட்சியா் மற்றும் மண்டல மேலாளரிடம் புகாா் அளித்தும் எவ்வித பயனுமில்லை.
யாருடைய கட்டுப்பாட்டில் ஒப்பந்த லாரிகள் செயல்படுகின்றன என்றும் தெரியவில்லை. உடனடியாக நெல் மூட்டைகளை தொடா்ந்து சேதமாகமல் பாதுகாக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி சிறைபிடிப்பு

நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சிறைபிடிப்பு

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மூடைகள்! விவசாயிகள் கவலை!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



