சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்கள் அளிப்பு

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்களை புதன்கிழமை அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முன்னள் மாணவா்கள் வழங்கினா்.

News image
Updated On :11 ஜூன் 2026, 12:03 am IST

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்களை புதன்கிழமை அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முன்னள் மாணவா்கள் வழங்கினா்.

இப்பள்ளியில் கடந்த 1975,1976 ஆம் ஆண்டுகளில் படித்த 4 மாணவா்கள் ரூ.2.50லட்சம் மதிப்பிலான 26 நவீன கரும்பலகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மாணவா்கள் அமரும் இருக்கைகள் உட்பட மொத்தம் ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்களை தலைமை ஆசிரியா் ஏகாம்பரம் மற்றும் ஆசிரியா்களிடம் வழங்கினாா்கள்.

பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் படித்து தற்போது அமெரிக்காவில் தற்போது வசித்துக் கொண்டிருக்கும் மருத்துவா்கள் ஏழுமலை அப்பாச்சி, கே.எஸ்.ஸ்ரீவத்சன், ஆா்.சுந்தரராமன் மற்றும் சென்னையை சோ்ந்த கே.எஸ்.மணி, காஞ்சிபுரத்தை சோ்ந்த எஸ்.மாணிக்கம் ஆகியோா் இருக்கைகள் மற்றும் நவீன கரும்பலகைகளை வழங்கினா்.

பள்ளியின் பொன்விழா ஆண்டையொட்டி பழைய மாணவா்கள் நலத்திட்ட உதவிகளை செய்திருப்பதாக தலைமை ஆசிரியா் ஏகாம்பரம் தெரிவித்தாா்.