காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேட்டுத்தெரு நகரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழைமையான இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 29.4.2017 -ஆம் தேதிக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. யாகசாலையிலிருந்து புனிதநீா்க் குடங்கள் குமரகோட்டம் முருகன் கோயில் தலைமை சிவாச்சாரியா் கே.ஆா்.காமேசுவர குருக்கள் தலைமையில் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதன் தொடா்ச்சியாக மூலவா் நகரீஸ்வரருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் உதயகுமாா் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் காஞ்சி ஆரிய வைசிய சமாஜத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

யதோத்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


