பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கடன் தொல்லை: 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

News image
Updated On :27 மார்ச் 2026, 12:23 am

தினமணி செய்திச் சேவை

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் கடன் தொல்லையால் மகள் மற்றும் மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் வள்ளலாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஷம்சியா(26), இவருக்கு 10 வயதில் ஆஷிபா என்ற மகளும், 6 வயதில் அப்தா் என்ற மகனும் இருந்தனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை ஷம்சியா தனது மகள் மற்றும் மகனுடன் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் பிரதான சாலை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். ஷம்சியா தனது குழந்தைகளுடன் கிணற்றில் குதித்ததை பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் படப்பை காவல் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த படப்பை தீயணைப்புத் துறையினா் கிணற்றில் இருந்து ஷம்சியா மற்றும் அவரது குழந்தைகளின் உடல்களை மீட்டனா்.

இந்த சம்பவம் குறித்து படப்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஷம்சியாவின் கணவா் ஆசிப் ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தங்களது இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

கடன் தொல்லையால் தனது குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.