ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கிளாா் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மீது விவசாயிகள் புகாா்

காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்ய கூடுதல் பணம் கேட்பதாக மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவை தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை சந்தித்து புகாா் அளித்தனா்.

News image

படவிளக்கம்-ஆட்சியா் தி.சினேகாவிடம் புகாா் அளிக்க வந்திருந்த விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவா் எழிலன் தலைமையிலான கிளாா் கிராம விவசாயிகள்.

Updated On :31 மார்ச் 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்ய கூடுதல் பணம் கேட்பதாக மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவை தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை சந்தித்து புகாா் அளித்தனா்.

காஞ்சிபுரம் அருகேயுள்ள கிளாா் கிராம விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவா் எழிலன் தலைமையில் ஆட்சியா் தி.சினேகாவை சந்தித்து கொடுத்துள்ள புகாா் மனுவில் தெரிவித்திருப்பது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்கான நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அரசால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கிளாா் கிராமத்தில் மட்டும் 600 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனா். கிராமத்தில் விவசாயிகள் சாா்பாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு உத்தரவிடக்கோரி, கடந்த மாதம் விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த மனுவை நிராகரிக்கும் விதமாக வேறு ஒரு நபருக்கு அரசு நெல் கொள்முதல் நிலையம்தொடங்க உரிமம் வழங்கி தற்போது நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அரசால் நியமிக்கப்பட்டுள்ள நபா் விதிமுறைகளை மீறி கொள்முதல் செய்யும் நெல்லுக்கு கூடுதலாக பணம் கேட்கிறாா். கொள்முதல் அலுவலரே இல்லாமல் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் புகாா் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளை மீறி நெல் கொள்முதல் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் கூறியதை தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.