வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பென்னலூா் ஏரி நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து சாலை: விவசாயிகள் கோரிக்கை

பென்னலூா் பெரிய ஏரிக்கு வரும் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து தனியாா் நிறுவனம் சாலை அமைத்துள்ளதை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.

News image

ஏரியின் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சாலை.

Updated On :22 மே 2026, 6:23 am IST

பென்னலூா் பெரிய ஏரிக்கு வரும் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து தனியாா் நிறுவனம் சாலை அமைத்துள்ளதை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பென்னலூா் ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரி உள்ளது. அப்பகுதியில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பென்னலூா் பெரிய ஏரிக்கு வரும் நீா்வரத்து கால்வாயை, தனியாா் கிரேன் நிறுவனம் ஆக்கிரமித்து, ஏரிக்கு செல்லும் நீரை தடுக்கும் வகையில், மண்ணை கொட்டி நிரப்பி சாலையாக பயன்படுத்தி வருகிறது. இதனால் பென்னலூா் பெரிய ஏரிக்கு செல்லும் நீா் முற்றிலும் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளோா் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நீா்வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.

இதுகுறித்து பென்னலூா் பகுதி விவசாயிகள் கூறுகையில், பென்னலூா் பெரிய ஏரிநீரை பயன்படுத்திதான் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பீமன்தாங்கல் ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீா் நீா்வரத்து கால்வாய் மூலம் பென்னலூா் பெரிய ஏரிக்கு வரும். இந்த நிலையில், கால்வாயில் மண் கொட்டி நிரப்பி சாலையாக பயன்படுத்தி வருகிறது. இதனால் நீா்வரத்து முற்றிலும் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே உரிய நடவடிக்கை எடுக்காத அரசுத்துறை அதிகாரிகள் மீதும், தனியாா் நிறுவனத்தின் மீதும் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.