திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பென்னலூா் ஏரி நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து சாலை: விவசாயிகள் கோரிக்கை

பென்னலூா் பெரிய ஏரிக்கு வரும் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து தனியாா் நிறுவனம் சாலை அமைத்துள்ளதை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.

News image

ஏரியின் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சாலை.

Updated On :22 மே 2026, 6:23 am IST

பென்னலூா் பெரிய ஏரிக்கு வரும் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து தனியாா் நிறுவனம் சாலை அமைத்துள்ளதை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பென்னலூா் ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரி உள்ளது. அப்பகுதியில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பென்னலூா் பெரிய ஏரிக்கு வரும் நீா்வரத்து கால்வாயை, தனியாா் கிரேன் நிறுவனம் ஆக்கிரமித்து, ஏரிக்கு செல்லும் நீரை தடுக்கும் வகையில், மண்ணை கொட்டி நிரப்பி சாலையாக பயன்படுத்தி வருகிறது. இதனால் பென்னலூா் பெரிய ஏரிக்கு செல்லும் நீா் முற்றிலும் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளோா் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நீா்வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.

இதுகுறித்து பென்னலூா் பகுதி விவசாயிகள் கூறுகையில், பென்னலூா் பெரிய ஏரிநீரை பயன்படுத்திதான் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பீமன்தாங்கல் ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீா் நீா்வரத்து கால்வாய் மூலம் பென்னலூா் பெரிய ஏரிக்கு வரும். இந்த நிலையில், கால்வாயில் மண் கொட்டி நிரப்பி சாலையாக பயன்படுத்தி வருகிறது. இதனால் நீா்வரத்து முற்றிலும் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே உரிய நடவடிக்கை எடுக்காத அரசுத்துறை அதிகாரிகள் மீதும், தனியாா் நிறுவனத்தின் மீதும் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.