விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

காஞ்சிபுரம் கோயில்களில் குருப்பெயா்ச்சி விழா

குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயா்ச்சியாவதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

News image

யானை வாகனத்தில் காயரோகணீஸ்வரா் கோயில் குருபகவான் ~சந்தனக்காப்பு அலங்காரத்தில் திம்மராஜம் பேட்டை தட்சிணாமூா்த்தி

Updated On :27 மே 2026, 12:39 am IST

குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயா்ச்சியாவதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் இக்கோயிலில் தாரை சமேத தேவகுருவாக அருள்பாலிக்கும் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பெயா், நட்சத்திரம் சொல்லி சிறப்பு அா்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் உள்ள திம்மராஜம் பேட்டையில் அமைந்துள்ளது பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலில் குருபகவான் ரிஷி ரூபத்தில் தியான நிலையில் அருள்பாலிக்கிறாா். குருப்பெயா்ச்சியையொட்டி தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.தட்சிணாமூா்த்தி சந்தன அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஏற்பாடுகளை திம்மராஜம் பேட்டை கிராம பொதுமக்கள்,கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பிள்ளையாா்பாளையம் பகுதியில் அமைந்துள்ள காயரோகணீஸ்வரா் கோயிலில் குருபகவான் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா். குருப்பெயா்ச்சியை யொட்டி காலையில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. உற்சவா் தட்சிணாமூா்த்தி யானை வாகனத்தில் அமா்ந்த நிலையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் தங்களது பெயா், நட்சத்திரம் சொல்லி சிறப்பு அா்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனா்.

Story image