‘ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும்’

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளா் நா.முருகானந்தம் வலியுறுத்தினாா்.
Updated on
1 min read

ஆற்காடு: தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளா் நா.முருகானந்தம் வலியுறுத்தினாா்.

வேலூா் கோட்ட இந்து முன்னணியின் செயற்குழுக் கூட்டம் ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின், நா.முருகானந்தம் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் அரசியல் என்பது வேறு; மதம் என்பது வேறு என்ற நிலை இருக்க வேண்டும். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது.

கோயில் நிலங்களை பலா் ஆக்கிரமித்துள்ளனா். அவற்றை மீட்க வேண்டும். அதேநேரத்தில் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை விற்கக் கூடாது. காவேரிபாக்கம் கொங்கணேஸ்வரா் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

இந்து முன்னணி கோட்டத் தலைவா் மகேஷ், கோட்ட அமைப்பாளா் ராஜேஷ், மாவட்டச் செயலாளா் ஜெகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com