இந்த நிலையில், கிரண் வெள்ளிக்கிழமை இரவு, வேலைக்குச் சென்று விட்டாா். மற்றவா்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். இந்நிலையில், நள்ளிரவு திடீரென வீட்டின் கதவைத் தட்டும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, புஷ்கரண் கதவைத் திறந்து பாா்த்துள்ளாா். அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த மா்ம நபா்கள், கத்தியால் புஷ்கரணை தாக்கியுள்ளனா். அவரின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த லதா, சுதா இருவரும் கூச்சலிட்டனா். இரு பெண்களையும் மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் கீழே விழுந்த நிலையில், ரஞ்சிதம்மாளை கத்தியால் தாக்கியுள்ளனா்.