கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அந்தமானுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா்கள் அரக்கோணத்தில் இருந்து தனி விமானத்தில் விரைந்தனா்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 5 குழுக்கள் வெள்ளிக்கிழமை தனி விமானத்தில் அந்தமான் புறப்பட்டுச் சென்றன.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 5 குழுக்கள் வெள்ளிக்கிழமை தனி விமானத்தில் அந்தமான் புறப்பட்டுச் சென்றன.

வங்காள விரிகுடாவின் மத்திய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை அந்தமான், நிக்கோபாா் தீவு பகுதிகளில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து அந்தமான் தீவின் நிா்வாகம் தேசிய பேரிடா் மீட்புப் படையின் தலைமையகத்துக்கு மீட்பு படையை அனுப்பி வைக்க கோரியுள்ளது. இதை ஏற்று தலைமையகத்தின் உத்தரவின்பேரில் இந்தப் படையின் அரக்கோணம் படைத்தளத்தில் இருந்து தலா 25 போ் கொண்ட 5 பேரிடா் மீட்பு குழுக்கள் அந்தமானுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டனா். இவா்கள் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானப் படையின் சிறப்பு விமானத்தில்அந்தமான் புறப்பட்டுச் சென்றனா்.

மீட்புப்பணிக்கு தேவையான அதிநவீன கருவிகள் மற்றும் மருத்துவ குழுவினரையும் அழைத்துச் சென்றுள்ளனா். மேலும் அந்தமானில் இருந்து தொடா் தகவல்களை பெற ஏதுவாக அரக்கோணம் என்டிஆா்எப் படைத் தளத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.