பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பேராசிரியர் அன்பழகன் நினைவுநாள்: ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர்.காந்தி அஞ்சலி 

பேராசிரியர் க. அன்பழகன் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர். காந்தி அஞ்சலி செலுத்தினார்.

News image
பேராசிரியர் அன்பழகன் நினைவுநாள்: ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர்.காந்தி அஞ்சலி
Updated On :7 மார்ச் 2023, 7:54 am

DIN

ராணிப்பேட்டை: பேராசிரியர் க. அன்பழகன் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர். காந்தி அஞ்சலி செலுத்தினார்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பேராசிரியர் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ஆர். காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே. சுந்தரமூர்த்தி, பொருளாளர் ஏ.வி. சாரதி, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத் (ராணிப்பேட்டை), ஹரிணி தில்லை (வாலாஜாபேட்டை), மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சந்தோஷ் காந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.