பேராசிரியர் அன்பழகன் நினைவுநாள்: ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர்.காந்தி அஞ்சலி 

பேராசிரியர் க. அன்பழகன் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர். காந்தி அஞ்சலி செலுத்தினார்.
பேராசிரியர் அன்பழகன் நினைவுநாள்: ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர்.காந்தி அஞ்சலி
பேராசிரியர் அன்பழகன் நினைவுநாள்: ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர்.காந்தி அஞ்சலி
Published on
Updated on
1 min read

ராணிப்பேட்டை: பேராசிரியர் க. அன்பழகன் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர். காந்தி அஞ்சலி செலுத்தினார்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பேராசிரியர் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ஆர். காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே. சுந்தரமூர்த்தி, பொருளாளர் ஏ.வி. சாரதி, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத் (ராணிப்பேட்டை), ஹரிணி தில்லை (வாலாஜாபேட்டை), மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சந்தோஷ் காந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com