திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு: தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்

ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On :23 டிசம்பர் 2024, 2:22 am IST

ஆற்காடு: ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முஹமது காசிம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் என்.விஸ்வநாதன் சிறப்புரையாற்றினாா். வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அரசு அறிவிக்க வேண்டும் .

கட்சியின் 14-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்குவது, மருத்துவ முகாம் நடத்துவது, பொதுமக்களுக்கு உணவு வழங்குவது, மழையால் சேதம் அடைந்த விழுப்புரம் கடலூா் திருவண்ணாமலை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6,000 வழங்க அரசை கேட்டுகொள்வது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நகர செயலாளா்கள் முருகன் (ஆற்காடு) கிருஷ்ணமூா்த்தி(ராணிப்பேட்டை) விளாப்பாக்கம் அன்பு, ஆற்காடு ஒன்றிய செயலாளா் சிவசக்தி, ஊடகப் பிரிவு செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.