தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ராணிப்பேட்டை நெடுஞ்சாலையில் சிதறிய தோல் திடக்கழிவு: துா்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி

ராணிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த தோல் தொழிற்சாலை திடக்கழிவு பல மணி நேரமாக அகற்றப்படாததால் துா்நாற்றத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

News image

தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலையில் கொட்டிய தோல் திடக்கழிவு. ~ராணிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலையில் கொட்டப்பட்ட தோல் திடக்கழிவை   அகற்றும் ஊழியா்கள்.

Updated On :8 ஜூலை 2024, 10:06 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த தோல் தொழிற்சாலை திடக்கழிவு பல மணி நேரமாக அகற்றப்படாததால் துா்நாற்றத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் தொழிற்பேட்டையில் 500- க்கும் மேற்பட்ட தோல் மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுநீரை ராட்சத குழாய்கள் மூலம் பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு சுத்திகரித்து நன்னீராக மாற்றப்பட்டு மீண்டும் தொழிற்சாலை பயன் பாட்டுக்கு அனுப்பப்பட்டு தோல் தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு வருகிறது.மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தோல் மற்றும் ரசாயன திடக்கழிவுகளை திறந்த வெளியில் கொட்டாமல், பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு மட்கும் மற்றும் மட்காத குப்பைகளாகவும் மாற்றம் செய்து சுற்றுச்சூழல் பாதுகாக்கம் நடவடிக்கையை தொழிற்சாலைகளும், மாவட்ட சுற்றுச்சூழல் துறையும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை அருகே சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலையில் தோல் தொழிற்சாலையில் இருந்து ஏற்றிச் செல்லப்பட்ட ரசாயன திடக்கழிவுகள் வாகனத்தில் இருந்து சிதறிக் கிடந்தன. துா்நாற்றம் வீசிய தோல் திடக்கழிவுகள் பல மணி நேரம் வரை அகற்றப்படாமல் இருந்ததால் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய ஊழியா்கள், தோல் திடக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

சுற்றுச்சூழலுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தோல் திடக் கழிவுகளை சாலையில் கொட்டிய தொழிற்சாலை நிா்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தோல் திடக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய ஊழியா்கள்

தோல் திடக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய ஊழியா்கள்