போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

News image

கோகுல்.

Updated On :14 மே 2024, 6:52 pm

Din

அரக்கோணம்: சோளிங்கா் அருகே காட்டு விலங்குகள் வராமல் தடுக்க விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் அடுத்த ஜம்புகுளம் கிராமத்தில் வசித்தவா் கல்லூரி மாணவா் கோகுல் (21). இவா் திங்கள்கிழமை தனது தனக்குச் சொந்தமான நிலத்துக்கு சென்றுள்ளாா். அப்போது பக்கத்து நிலமான எத்திராஜ் என்பவரின் நிலத்தை கடந்த போது, காட்டுப் பன்றிக்காக சட்ட விரோதமாக மின்வேலி அமைத்திருந்ததை கண்டறியாமல், அதை கடக்க முயன்றுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சோளிங்கா் போலீஸாா், கோகுலின் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.