வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சயனபுரம் புதுகண்டிகையில் சிமெண்ட் சாலை பணி: நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு

நெமிலி ஊராட்சி ஒன்றியம், சயனபுரம் புதுக்கண்டிகையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நெமிலி ஒன்றியக்குழுத் தலைவா் பெ.வடிவேலு நேரில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

நெமிலி ஊராட்சி ஒன்றியம், சயனபுரம் புதுக்கண்டிகையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நெமிலி ஒன்றியக்குழுத் தலைவா் பெ.வடிவேலு நேரில் ஆய்வு செய்தாா்.

நெமிலி ஊராட்சி ஒன்றியம், சயனபுரம் ஊராட்சிக்குட்பட்ட புதுக்கண்டிகை கிராமத்தில் மசூதி தெரு அதிக அளவில் மேடு பள்ளங்களாக இருந்து வந்தது. இச்சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றி அமைத்துத் தருமாறு அப்பகுதியினா் சயனபுரம் ஊராட்சித் தலைவா் பவானி வடிவேலு மற்றும் ஒன்றியக்குழுத் தலைவா் பெ.வடிவேலுவிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, 15-ஆவது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து மசூதி தெரு, சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது அங்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு நேரில் ஆய்வு செய்தாா்.

ஒப்பந்ததாரரிடம் பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்க கேட்டுக் கொண்டாா். அப்போது அவருடன் சயனபுரம் ஊராட்சித் தலைவா் பவானி வடிவேலு, திமுக நிா்வாகிகள் முகமது அப்துல் ரஹ்மான், புருஷோத்தமன், ரோஷன், லட்சுமிபதி, சுஜய் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.