சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல்

ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

News image

வேட்புமனு தாக்கல் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 6:36 pm

ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகள், நாம் தமிழா், தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளா்கள் என மொத்தம் 113 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

அதன் படி, அரக்கோணம் (தனி) -24, சோளிங்கா் -35, ராணிப்பேட்டை - 31, ஆற்காடு -23 என மொத்தம் 113 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.