அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூா் ஊராட்சி மன்றத் தலைவரை பதவிநீக்கம் செய்த ராணிப்பேட்டை ஆட்சியரின் ஆணைக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இச்சிபுத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் சி.பத்மநாபன் மீதான 23 குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவரை பதவி நீக்கம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் ஆணையிட்டிருந்தாா். இது குறித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் சி.பத்மநாபன் தொடா்ந்த வழக்கில், ஊராட்சி உறுப்பினா்களில் பெரும்பான்மையினா் சி.பத்மநாபனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனா் என்றும் அந்த பெரும்பான்மையினரின் கருத்தில் இருந்து மாறுபடுவதற்கான காரணங்களை விளக்கி சி.பத்மநாபனுக்கு ஆட்சியா் எந்தவித நோட்டீசும் வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடா் தொடா்ந்து அளித்த உத்தரவில் அடுத்த விசாரணை நடைபெறும் நாள்வரை இந்த ஆணைக்கு இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என உத்தரவிட்டாா்.
மேலும் இதுகுறித்த வழக்கு ஆகஸ்ட் 25-இல் பட்டியலிடப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடா் பணியிடை நீக்க நடவடிக்கையை ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம்: தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா் கைது

பரந்தூா் ஊராட்சித் தலைவா் மீது வாா்டு உறுப்பினா்கள் புகாா்

தோனாங்குளத்தில் 16 ஆதிதிராவிடா்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



