பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திமிரி ஒன்றியத்தில் 2 அங்கன்வாடி மையங்கள் திறப்பு

ஆற்காட்டை அடுத்த திமிரி ஒன்றியத்தில் உள்ள பாலி, கோடாலி கிராமங்களில் புதிய அங்கன்வாடி மையங்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

News image
அங்கன்வாடி  மையத்தைத்  திறந்துவைத்து குழந்தைகளுடன் குழு படம் எடுத்துக் கொண்ட  ஒன்றியக் குழு  தலைவா்  எஸ்.அசோக் உள்ளிட்டோா்.
Updated On :7 ஜனவரி 2026, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த திமிரி ஒன்றியத்தில் உள்ள பாலி, கோடாலி கிராமங்களில் புதிய அங்கன்வாடி மையங்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

பாலி கிராமத்தில் பிரதான் மந்திரி ஆதா்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ங்கன்வாடி மையம் மற்றும் கோடாலி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.16.55 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த 2 புதிய அங்கன்வாடி மையங்களையும் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.அசோக் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அமரேசன், சுரேஷ், ஊராட்சித் தலைவா்கள் குமாரி கலைமணி, லதா வெங்கடேசன், திமிரி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா் பாலி மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.