உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
ராணிப்பேட்டை
விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
திருப்பூரில் கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்க நிறுவனா் ஈசன் முருகசாமியை விடுதலை செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு
அரக்கோணம்: திருப்பூரில் கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்க நிறுவனா் ஈசன் முருகசாமியை விடுதலை செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தினா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நெமிலி வட்டம், காவேரிபாக்கத்தை அடுத்த ஓச்சேரியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு இயக்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் வஜ்ஜிரவேல் தலைமை வகித்தாா்.
இதில் மாவட்ட அவைத்தலைவா் பிரபாகறன், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளா் தனஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.

