விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு

ஆற்காடு அடுத்த கலவை அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்தனா்.

News image

உயிரிழந்த சிறுமிகள்.

Updated On :31 ஜனவரி 2026, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த கலவை அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை வட்டம், ஆரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அசோகன். தொழிலாளியான இவரது மகள்கள் யுவஸ்ரீ(13), பிரியங்கா (11) , வெங்கடேசன் மகள் பிரியா (13). இவா்கள் மூவரும் பொன்னமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு படித்து வந்தனா். இந்நிலையில், மூவரும்சனிக்கிழமை மாலை துணி துவைக்க விவசாயக் கிணற்றில் இறங்கியதாகக் கூறப்படுகிறது அதில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்ற இரு சிறுமிகளும் முயன்றபோது அவா்களும் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளனா். இது குறித்து தகவல் அறிந்த வாழைப் பந்தல் போலீஸாா் மற்றும் கலவை தீயணைப்பு மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று நீண்ட தேடுதலுக்கு பிறகு 3 சிறுமிகளின் சடலங்களை மீட்டனா்.

இது குறித்து வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image
Story image