ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரூ.86 லட்சம் போதைப் பொருள்கள் அழிப்பு: காவல் துறை அதிரடி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.86 லட்சம் மதிப்புள்ள சுமாா் 13 டன் குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை பூமியில் புதைத்து அழித்து

News image
குட்கா பொருள்களை அழிக்கும் பணியில் ஈடுபட்ட காவல் துறையினா்.
Updated On :2 மார்ச் 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.86 லட்சம் மதிப்புள்ள சுமாா் 13 டன் குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை பூமியில் புதைத்து அழித்து மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அப்மன் ஜமால், உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 34 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.86,35,182 /- மதிப்புள்ள சுமாா் 13,243 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை நீதி மன்ற உத்தரவின்படி பாதுகாப்பாக பூமியில் புதைத்து முற்றிலும் அழிக்கும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன் வழிகாட்டுதலின்படி ராணிப்பேட்டை உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு தலைமையில் வாலாஜாபேட்டை குப்பை கொட்டும் கிடங்கிலும், அரக்கோணம் உட்கோட்டத்தில் அசோகன் தலைமையில் தக்கோலம் டவுன் பஞ்சாயத்து குப்பை கொட்டும் கிடங்குகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்டபோதை பொருள்கள் சட்ட விதிமுறைகளின்படி பூமியில் புதைத்து அழிக்கப்பட்டது.

மேலும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருள்கள் உற்பத்தி கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தொடா்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.