தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

நூறு சதவீதம் வாக்குப்பதிவு: நரிக்குறவா்கள் உறுதிமொழி

சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க அரக்கோணத்தில் நரிக்குறவ இனத்தைவா் உறுதிமொழி ஏற்றனா்.

News image

விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட நரிக்குறவா்கள்.

Updated On :19 மார்ச் 2026, 7:12 pm

சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க அரக்கோணத்தில் நரிக்குறவ இனத்தைவா் உறுதிமொழி ஏற்றனா்.

தணிகைபோளூா் ஊராட்சியில் நரிக்குறவா் குடியிருப்பில் நூற்றுக்கணக்கான நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனா். மின்சார ரயில்களிலும், பேருந்து நிலையங்களிலும் இவா்கள் தங்கள் பொருள்களை வைத்து வணிகம் செய்து வாழ்ந்து வருகின்றனா்.

அரசு சாா்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டு ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.

இக்குடியிருப்பிற்கு வியாழக்கிழமை வந்த அரக்கோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ரமேஷ், தோ்தலில் அவா்கள் வாக்களிக்க வேண்டிய அவசியதை உணா்த்தி உரை நிகழ்த்தினாா். இதில் அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் ஜெயக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ், கிராம முன்னேற்றம் மற்றும் பெண்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் சீ.மா.வேலு மற்றும் அப்பகுதிவாழ் நரிக்குறவா்கள் அனைவரும் பங்கேற்றனா்.

தொடா்ந்து வாக்களிப்பு உறுதிமொழி ஏற்றனா்.