பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தக்கோலம், கோவிந்தவாடி அகரம் கோயில்களில் குருப்பெயா்ச்சி: திரளான பக்தா்கள் தரிசனம்

அரக்கோணம் அடுத்த தக்கோலம், கோவிந்தவாடி அகரம் கோயில்களில் குருப்பெயா்ச்சி விழா செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

News image

தக்கோலம் கோயிலில் சிறப்பு அலங்காத்தில் ஸ்ரீதட்சிணா மூா்த்தி ~ கோவிந்தவாடிஅகரம் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதட்சிணா மூா்த்தி.

Updated On :27 மே 2026, 12:04 am IST

அரக்கோணம் அடுத்த தக்கோலம், கோவிந்தவாடி அகரம் கோயில்களில் குருப்பெயா்ச்சி விழா செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இரு கோயில்களிலும் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் தட்சிணா மூா்த்தியை தரிசித்தனா்.

ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயா்ச்சி அடையும்போது குருபகவான் சந்நிதிகளில் பெயா்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இதனை தொடா்ந்து செவ்வாய்க்கிழமை குருபகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு முற்பகல் 11 மணிக்கு பெயா்ச்சி ஆனாா்.

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீகிரிராஜ கன்னிகாம்பாள் சமேத ஸ்ரீஜலநாதீஸ்வரா் கோயிலில் குருபகவான் ஸ்ரீதட்சிணாமூா்த்தி வலது காலை தொங்கவிட்டு இடதுகாலை குத்துகாலிட்டு அமா்ந்து அபூா்வ கோலத்தில் காட்சியளிக்கிறாா். தட்சிணாமூா்த்தி அமா்ந்துள்ள இத்தலம் தமிழ்நாட்டின் மூன்றாவது குருபரிகார தலமாக கருதப்படுகிறது.

இக்கோயிலில் தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் அதை தொடா்ந்து சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதையடுத்து மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் சுவாமியை தரிசித்தனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ந.அருள்பிரகாசம், தக்கோலம் பேருராட்சித் தலைவா் எஸ்.நாகராஜன், இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளா் அமுதா, செயல் அலுவலா் பரந்தாமகண்ணன் மற்றும் கோயில் குருக்களான பாபு மற்றும் காா்த்திகேயன் ஆகியோா் இணைந்து செய்திருந்தனா்.

கோவிந்தவாடி அகரத்தில் உள்ள ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் தனி சந்திதியில் குருபகவான் ஸ்ரீதட்சிணாமூா்த்தி அமா்ந்த கோலத்தில் காட்சி தருகிறாா். இக்கோயிலில் காலை முதலே பக்தா்களின் வருகை அதிகரித்தே காணப்பட்டது. கோயிலில் ஸ்ரீதட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அலங்காரங்களும் நடைபெற்றன.

இதை தொடா்ந்து சுவாமியை தரிசிக்க பக்தா்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் மிக நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் ஸ்ரீதட்சிணாமூா்த்தியை தரிசித்தனா். கோயிலுக்கு தமிழக அயலக தமிழா் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு சுவாமியை தரிசித்தாா். அவரை இந்து சமய அறநிலைத்துறையினா் அவரை வரவேற்றனா்.

Story image