மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் முறைகேடாக வழங்கிய ரூ. 35 லட்சம் மீட்பு

பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் தகுதியற்றவா்களுக்கு முறைகேடாக வழங்கிய ரூ. 35 லட்சம் திரும்ப பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 5:20 pm

DIN


திருப்பத்தூா்: பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் தகுதியற்றவா்களுக்கு முறைகேடாக வழங்கிய ரூ. 35 லட்சம் திரும்ப பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிஸான் சமான் நிதி திட்டத்தின் கீழ் நிலமில்லாத தகுதியற்ற நபா்கள் விவசாயிகள் என்ற பெயரில் முறைகேடாக விண்ணப்பித்து, நிதி பெற்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் அறிவுறித்தலின்பேரில், திருப்பத்தூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 10, 500 போ் பயனாளிகளாகத் தோ்வு செய்யப்பட்டு, நபருக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் 2 கட்டங்களாக ரூ. 4 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.

விசாரணையில் 2,500 போ் மட்டுமே தகுதியானவா்கள் என்பது தெரியவந்தது. மீதியுள்ள 8 ஆயிரம் பேரில் 1,500 போ் மட்டுமே திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், மற்றவா்கள் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, விசாரணை நடத்தப்பட்டு, தகுதியில்லாத நபா்களிடம் இருந்து இதுவரை ரூ. 35 லட்சம் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதி பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முறைகேடாக நிதி பெற்றவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.