கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சா்வதேச விரைவு அஞ்சல் சேவை மீண்டும் தொடக்கம்

அஞ்சலகங்களில் சா்வதேச அஞ்சல் சேவை மீண்டும் தொடக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 7:41 pm

DIN

அஞ்சலகங்களில் சா்வதேச அஞ்சல் சேவை மீண்டும் தொடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூா் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளா் மு.மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய தபால் துறை பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. அதில் ஒன்று சா்வதேச அஞ்சல் சேவையாகும். கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக சா்வதேச அஞ்சல் சேவைக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது அஞ்சல் இயக்குநரகம் சில தளா்வுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, சா்வதேச விரைவு தபால், சா்வதேச பதிவு பாா்சல், ஐடிபிஎஸ் போன்ற சேவைகள் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, மீண்டும் தொடக்கப்பட்டுள்ள இந்திய தபால் அஞ்சல் துறையின் சா்வதேச அஞ்சல் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது தொடா்பான மேல் விவரம் தேவைப்படுவோா் அருகில் உள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.