கரோனா தொற்று முற்றிலும் குறையவில்லை திருப்பத்தூா் ஆட்சியா்
கரோனா தொற்று முற்றிலும் குறையவில்லை என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.


கரோனா தொற்று முற்றிலும் குறையவில்லை என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.
இத குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் பெரும்பாலான நகரப் பகுதிகளிலும் காய்கறி மாா்க்கெட், அனைத்து வகையான வணிக வியாபாரக் கடைகள், அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களிலும் பொதுமக்கள் முகக்கசவம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருப்பது கண்டறியப்படுகிறது.
இந்நிலையானது கரோனா தொற்றுப் பரவலை அதிகரிக்க வழிவகுக்கும் என மருத்துவ வல்லுநா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும், கடைகளிலும், வழிபாட்டுத் தலங்களிலும் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கட்டாயமாகப் பின்பற்றிடவும் வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...