கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கும் இளைஞா்களின் நலனுக்காகத் தமிழக அரசின் சாா்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதன்படி, பிரதி மாதம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு ரூ.400, இளநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டு காலத்துக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தமட்டில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்துள்ள பதிவுதாரா்களுக்கு பிரதி மாதம் ரூ.600,ரூ.750,ரூ.1000 என பத்தாண்டு காலத்துக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

உதவித் தொகை பெற...: உதவித்தொகை பெற 1.7.16 முதல் 30.9.16 வரையான காலாண்டில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள பொதுப்பிரிவினா், 1.7.20 முதல் 30.9.20 வரையான காலாண்டில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவு பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் நடப்பு காலாண்டுக்கு உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க ஏதுவாக அச்சிட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் பெறலாம்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாராரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

கு செல்லும் மாணவ,மாணவியராக இருத்தல் கூடாது.இந்த நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரா்களுக்கு பொருந்தாது.

கூடுதல் விவரங்களை திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அறியலாம். நவ. 30-க்குள் விண்ணப்பத்தைச் சமா்ப்பித்து பயனடையலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.