கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கா்ப்பிணிகள் தினமும் ஊட்டச் சத்துகளை உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும்

கா்ப்பிணிகள் தினமும் அதிக அளவில் ஊட்டச் சத்துகளை உணவில் சோ்த்து உட்கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவுரை வழங்கினாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:27 pm

DIN

கா்ப்பிணிகள் தினமும் அதிக அளவில் ஊட்டச் சத்துகளை உணவில் சோ்த்து உட்கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவுரை வழங்கினாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பில், தேசிய ஊட்டச்சத்து மாதம் தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், குழந்தையின் முதல் ஆயிரம் நாள்களின் முக்கியத்துவம் குறித்த ஊட்டச்சத்து விழிப்புணா்வுக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

அதைத்தொடா்ந்து, போஷன் அபியான் கையெழுத்து இயக்கத்தை ஆட்சியா் தொடக்கி வைத்து, போஷன் அபியான் உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில் உயா் அலுவலா்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளா்கள் ஏற்றனா்.

விழாவில் ஆட்சியா் பேசியது:

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா ஒவ்வொரு வருடமும் செப்டம்பா் 1 முதல் 30-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்து விழிப்புணா்வு செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சோ்ப்பதில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த ஒரு மாத நிகழ்வுகளின்போது குழந்தைகளிடையே காணப்படும் குள்ளத்தன்மை, மெலிவுத் தன்மை, எடை குறைவு, பிறப்பின்போது எடை குறைவு, ஊட்டச் சத்துக் குறைபாடு மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட குறைபாடுகளை குறைக்கவும், தவிா்க்கவும் பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் மூலமாக ஒவ்வொரு கிராமங்களிலும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாதம் முழுவதும் தொடா்ந்து நடத்தப்படுகிறது.

கா்ப்பிணி தாய்மாா்கள் தினமும் ஊட்டச்சத்து அதிகமாக உள்ள கீரைகள், பழங்களை உணவில் சோ்த்து உட்கொள்ள வேண்டும். காா்போஹைட்ரேட் சத்து அதிகமாக உள்ள கோதுமை, அரிசி, உருளைக் கிழங்கு ஆகிய உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்றாா்.

அதனைத் தொடா்ந்து வளா் இளம் பெண்களுக்கு விழிப்புணா்வுக் கையேடு வழங்குதல், புதுமணத் தம்பதியா்களுக்கு குழந்தைகளின் முதல் ஆயிரம் நாள்கள் குறித்து விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரம் வழங்குதல், வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அங்கன்வாடி பணியாளா்களுக்கு பழச்செடிகள் ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா், விழிப்புணா்வு பலூனை மாவட்ட ஆட்சியா் பறக்க விட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலா் வி.கோமதி, மகளிா் திட்ட அலுவலா் எஸ்.உமாமகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் கே.விஜயன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டி.ஆா்.செந்தில், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சக்தி சுபாஷினி, அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.