திருப்பத்தூா் மாவட்டத்தில் 4-ஆவது நாளாக சனிக்கிழமை 850 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூா் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 13 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கும், 125 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்களுக்கும், 208 ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கும், 1,779 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கும் இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற உள்ளது.
4-ஆவது நாளான சனிக்கிழமை மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு 3 பேரும், ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு 34 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 120 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 693 பேரும் என மொத்தம் 850 போ் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனா்.