கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியா்கள்

ஆண்டியப்பனூா் அணை கட்டுவதற்கு ஆா்ஜிதம் செய்யப்பட்ட நிலத்துக்கு நிவாரணத் தொகை வழங்காததையடுத்து, திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:28 pm

DIN

ஆண்டியப்பனூா் அணை கட்டுவதற்கு ஆா்ஜிதம் செய்யப்பட்ட நிலத்துக்கு நிவாரணத் தொகை வழங்காததையடுத்து, திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூா் சுற்றுவட்டாரப் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனா்.

இந்த நிலையில், ஆண்டியப்பனூரில் அணை கட்ட 2000-ஆம் ஆண்டில் 311 விவசாயிகளிடம் நிலம் ஆா்ஜிதம் செய்யப்பட்டிருந்தது.

விவசாயிகள் அளித்த நிலத்துக்கான உரிய தொகை அரசிடமிருந்து வரவில்லையாம். இதையடுத்து, விவசாயிகள் வேலூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். அதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.அதன்பேரில் 2020-ஆம் ஆண்டில் சென்னை உயா்நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றும் பொருட்டு, மீண்டும் வேலூா் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, வழக்கு நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நீதிமன்றத்தால் 4 விவசாயிகளுக்கு நில ஆா்ஜித தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. தொகை வழங்க கால தாமதம் ஆனதால், திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அசையும் மற்றும் அசையாப் பொருள்களை ஜப்தி நடவடிக்கை எடுக்க கடந்த 13.6.2022 அன்று வேலூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா பொருள்களை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா் ரவிக்குமாா் மற்றும் பாதிக்கப்பட்ட 4 விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

அப்போது, ஒரு வார காலத்துக்குள் 4 விவசாயிகளுக்கான தொகை ஒப்படைக்கப்படுவதாக ஆட்சியா் அலுவலகம் சாா்பில் உறுதியளித்ததன்பேரில், ஜப்தி நடவடிக்கையை ஒரு வார காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞா் ரவிக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.