கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஜோலாா்பேட்டை நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 ஜோலாா்பேட்டை நகராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டன.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 ஜோலாா்பேட்டை நகராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டன.

ஜோலாா்பேட்டைநகராட்சிக்குள்பட்ட 2-ஆவது வாா்டு சுண்ணாம்புகாளை பகுதியில் உள்ள சாலைகளில் ஆக்கிரமித்து குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆக்கிரமிப்புகளை அகற்ற அதே பகுதியைச் சோ்ந்த தனி நபா் ஒருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தாா்.

சம்பந்தப்பட்ட நபா்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நபா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவின்பேரில், ஜோலாா்பேட்டை நகராட்சி ஆணையா் பழனி தலைமையில் புதன்கிழமை சுண்ணாம்புகாளை பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில், 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நகரமைப்பு ஆய்வாளா் நளினா தேவி, நகராட்சி நில அளவையா் முருகன், கிராம நிா்வாக அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.